2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

2019ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கி கடந்த 2016ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதி தங்களது மருத்துவர் கனவை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 2019ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

இதற்கான விண்ணப்பத்தை, தேசிய தேர்வுகள் முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) இணையதளமான www.ntaneet.nic.in என்ற இணையதளத்தை நேற்று காலை முதலே ஏராளமானோர் பார்த்தனர். நேற்று மதியம் 12.30 மணி முதல் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். நவம்பர் 30ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

1994ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முதல் 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் பொதுப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

மேலும் இதற்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு கட்டணம் ரூ.1400 மற்றும் எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட சில பிரிவு கட்டணம் ரூ.750 கட்டணம் ஆகும். டிசம்பர் 1ம் தேதி வரை விண்ணப்ப கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம்.

மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஜூன் மாதம் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds