மாணவர்களின் புத்தகப்பை எடை இவ்வளவு இருந்தால் போதும்: மத்திய மனிதவளம் மேம்பாட்டுத்துறை

பள்ளி மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் மாணவர்களுக்கு மிகவும் சுமையாக தெரிவது புத்தகப்பை சுமப்பது தான். 1ம் வகுப்பு முதலே அதிக எடைக் கொண்ட புத்தகப்பையை பிஞ்சுகள் சுமக்கின்றன.

இந்தியளவில் பள்ளி மாணவர்கள் குறைந்தது 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பபையை சுமக்கின்றனர். அதாவது. அவர்களின் மொத்த உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமக்கின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பொறுத்தவரையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட முப்பருவ பாடமுறை திட்டத்திற்கு பிறகு குறைந்த எடையில் மாணவர்கள் புத்தகத்தை சுமப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில், மாணவ மாணவிகளின் புத்தகப்பை இருக்க வேண்டிய அளவு, பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட விதிமுறைகளை வகுத்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் வழங்கக்கூடாது என்றும், இவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவரி வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எண் வகுப்பு புத்தகப்பை எடை
1 1ம் வகுப்பு - 2ம் வகுப்பு 1.5 கிலோ
2 3ம் வகுப்பு - 5ம் வகுப்பு 2-3 கிலோ
3 6ம் வகுப்பு & 7ம் வகுப்பு 4 கிலோ
4 8ம் வகுப்பு & 9ம் வகுப்பு 4.5 கிலோ
5 10ம் வகுப்பு 5 கிலோ

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds