5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி... கருத்து தெரிவிக்க மறுத்து மோடி எஸ்கேப்

5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் முன்னிலையில் இருந்து ஆட்சியை பிடிக்க உள்ளது. பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி எஸ்கேப் ஆகியுள்ளார்.

தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாகவுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் 63 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்து வந்த பாஜக தோல்வியை சந்தித்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.

ராஜஸ்தானிலும் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக 81 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 112 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இங்கும், பாஜக 103 இடங்களில் முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது. மிசோரத்தில், எம்என்எப் கட்சி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளதாக மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பது உறுதியாகிவிட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. பாஜக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

ஆனால், மத்தியில் உள்ள பாஜக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பின்னடைவு சந்தித்துள்ளது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds