பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து அமர்நாத் யாத்ரீகர்கள் 16 பேர் பலி!
16 Amarnath pilgrims killed, about 30 injured as bus skids off Jammu-Srinagar highway
ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 அமர்நாத் யாத்ரீகர்கள் பலியானார்கள்.
ஜம்முகாஷ்மீரில் ஆனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். தற்போது, அமர்நாத் குகையில் பனிலிங்கம் உருவாகி மக்களுக்கு காட்சியளிக்கிறது. ஏராளமான மக்கள் தினமும் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீநகரில் இருந்து இன்று அமர்நாத் சென்று கொணடிருந்த பேருந்து ஒன்று, மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் இருந்த 16 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அம்ர்நாத் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் நேற்று மரணம் அடைந்தார்.
You'r reading பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து அமர்நாத் யாத்ரீகர்கள் 16 பேர் பலி! Originally posted on The Subeditor Tamil
More India News