ஐயப்பனை அதிகாலையில் ரகசியமாக தரிசித்த இரு பெண்கள் - சபரிமலையில் பரபரப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் ரகசியமாக இரு பெண்கள் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக சபரிமலைக்கு சென்ற பெண்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலம் முழுவதும் தீபமேற்றி போராட்டம் நடத்தினர்.

ஆனால் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள மாநில ஆளும் இடதுசாரி முன்னணி அரசு முனைப்பு காட்டி வருகிறது. பெண்களை அனுமதிக்க ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று கேரளாவில் 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற மகளிர் சுவர் போராட்டத்தையும் பிரமாண்டமாக நடத்தியது.

இந்நிலையில் மகளிர் சுவர் போராட்டம் நடந்த சூட்டோடு இன்று அதிகாலையில் இரு பெண்களை ஐயப்ப தரிசனம் செய்யவும் அரசு ஏற்பாடு செய்து விட்டது. அதிகாலை 3.45 மணியளவில் சீருடை அணியாத போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்களும் பதினெட்டு வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்று தரிசனம் செய்துள்ளனர்.

இரு பெண்களும் மற்ற பக்தர்களுக்கு அடையாளம் தெரியாத வகையில் கறுப்பு உடையால் முகத்தை மூடிச் சென்று ரகசியமாக சாமி தரிசனம் செய்த தகவல் தாமதமாகவே உறுதிப்படுத்தப்பட்டதால் பரபரப்பாகி கிடக்கிறது சபரிமலை வளாகம்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :