மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் புகார்?

பாஜக ஆட்சியை விமர்சித்த மாணவி சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் போலீசுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டார். அவரின் இந்த கோஷம் பெரிய அளவில் வைரல் ஆனது. அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆனது. இதனால் தமிழிசை அவருக்கு எதிராக புகார் அளித்தார்.

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்களை தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.

முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

தமிழிசை அளித்த புகாரின்பேரில் போலீசார் சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மறுநாள் காலை அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழிசைக்கு எதிராக சோபியாவும் அவரது தந்தையும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தனர். அதேபோல் வழக்கு தொடுத்ததற்கு எதிராகவும் புகார் அளித்தனர். ஆனால் தமிழிசை மீது போலீஸ் எந்த விதமான நடவடிக்கையும் அப்போது எடுக்கவில்லை.

இதனால் சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். காவல் துறைக்கு எதிராகவும், தமிழிசைக்கு எதிராகவும் புகார் அளித்தார். இதில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், விசாரணையின் போது சோபியாவும் உடன் இருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இன்று மூவரையும் மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தது. ஆணைய உறுப்பினரான நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடந்தது. திருநெல்வேலியில் உள்ள ஆய்வு மாளிகையில் இந்த விசாரணை நடந்தது. போலீஸ் நடந்து கொண்ட விதம் குறித்தும், தமிழிசை சௌந்தரராஜன் நடந்து கொண்ட விதம் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds