தஞ்சையில் மழையால் சேதமடைந்த குறுவை நெல்

by Manjula, Oct 4, 2018, 19:47 PM IST

தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல ஓடுகிறது.

இந்நிலையில் தஞ்சையில் கொட்டி தீர்த்த தொடர் மழையால் அறுவடை செய்த குறுவை நெல் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி உள்ளதால், அவை மழையில் நனைந்து, முளைத்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் இன்றி பயிர் கருகி போவது அதிக தண்ணீரில் பயிர் அழுகி போவதுமாக தஞ்சை விவசாயிகளை வாட்டி எடுக்கிறது

You'r reading தஞ்சையில் மழையால் சேதமடைந்த குறுவை நெல் Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை