புதிதாக திறக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி பூங்கா-விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பாக, தாய் திட்டத்தின்கீழ் வெள்ளிமேடுபேட்டை ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தினை கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப் பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, ஆரணி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.ராஜேந்திரன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
You'r reading புதிதாக திறக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி பூங்கா-விழுப்புரம் Originally posted on The Subeditor Tamil
More Local news News