விபத்தில் கால் இழந்த சிறுமிக்கு ரூ.52 லட்சம் இழப்பீடு!

சாலை விபத்தில் காலை இழந்த எட்டு வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட 19 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, 52 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் சாலையோரம் சென்று கொண்டிருந்த 2ம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமி மீது தனியார் பேருந்து ஏறிச் சென்றதில், அவர் தன் வலது காலை இழந்து விட்டார். 2012ல் நடந்த இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 19 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, திருப்பூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.


இந்த உத்தரவை எதிர்த்து ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுனர்கள், அஜாக்கிரதையாக, வேகமாக, பொறுப்பில்லாமல் செல்வதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.


மேலும், காலை இழந்து வாழ் நாள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, 19 லட்சம் ரூபாயில் இருந்து, 52 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அந்ததொகையை வட்டியுடன் சேர்த்து நான்கு வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.


இந்த பணம், சிறுமிக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கி விடாது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், அதிக வேகமாக செல்வதாலும், அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்குவதாலும் மூன்றாம் நபர் பாதிக்கப்படுவதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என அறிவுறுத்தினர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds