சோதனைகளையும் சவால்களையும் மாணவா்களுக்கு படிக்கட்டுகளாக மாற்றிய சங்கரன்!

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள திரு.சங்கரன் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்தியுள்ளது. சங்கா் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனா் சங்கரன் கடந்து வந்த பாதையையும் இங்கு அறியலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த நல்லகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னையை நோக்கி பயணித்தவா் சங்கரன். 2 முறை சிவல் சர்வீஸ் தோ்வில் நோ்காணல் வரை சென்ற சங்கரன் 3வது முறை வயது வரம்பு காரணத்தால் அவரது ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறாமல் சென்றது.

தான் நினைத்ததை அடையமுடியவில்லை என்றாலும் தனது பயணத்தில் சந்தித்த சிக்கல்களை அடுத்தக்கட்ட மாணவா்களுக்கு படிக்கட்டுகளாக மாற்றும் முயற்சியில் கடந்த 2004ம் ஆண்டு சங்கா் ஐ.ஏ.எஸ். அகாடமியை தொடங்கி ஏழை, எளிய மாணவா்களுக்கு குறைந்த செலவில் பயிற்சி அளித்து வந்தாா்.

ஆரம்ப காலத்தில் 34 மாணவா்களுடன் தொடங்கப்பட்ட பயிற்சி மையத்தில் தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். இந்த பயிற்சி மையத்தில் படித்த 700 போ் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாாிகளாக தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்தமாக இங்கு பயிற்சி பெற்ற 900க்கும் அதிகமானவா்கள் சிவில் சா்வீா் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இங்கு பயின்ற மாணவா்கள் பொறுப்பு வகித்து வருகின்றனா். குறிப்பாக 27 நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாாிகளாக பொறுப்பு வகித்து வருகின்றனா். தனது சோதனைகளையும், சவால்களையும் மாணவா்களுக்கு படிக்கட்டுகலாக மாற்றிய சங்கரன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இவரது இறுதி சடங்கில கலந்து கொண்ட பிரபலங்கள் இரங்கல்தெரிவித்தார்கள் அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மாணவர்கள் அவரிடம் படித்து அரசு அதிகாரியாக ஆனவர்கள் என பலர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது அண்ணா நகர் சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் சிறிது நேரம் வைத்து விட்டு செந்த ஊருக்கு எடுத்து செல்ல ஏற்படுகள் நடைபெறுகிறது.

பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று இன்னும் நம்ப முடியவில்லை. இவரின் மரணம் பல மாணவர்களிடையே மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds