என்னை பதவி விலகச் சொல்ல கமல் யார் ?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீராப்பு

why should I have to resign, minister Raiendra Balaji replies MNM

by Nagaraj, May 14, 2019, 14:39 PM IST

அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலகுமாறு கூறுவதற்கு கமலுக்கு என்ன அருகதை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியதுடன், தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ கூட தெரிவிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி சர்ச்சையாகியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதோ சர்ச்சையை அதிகரித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் , அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிக்கை வெளியானது.

மக்கள் நீதி மய்யத்தின் இந்த அறிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தம்மை பதவிநீக்கச் சொல்ல கமலஹாசனுக்கு என்ன அருகதை இருக்கிறது. தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கமல் கட்சி ஆரம்பித்திருப்பாரா?. இந்துக்களின் மனதை கமல்ஹாசன் புண்படுத்திவிட்டார்.

கமல் கண்ணியம் மிக்க பேச்சு பேசியிருந்தால் நான் அவ்வாறு பேசியிருக்க மாட்டேன். இந்துக்களை விமர்சித்தால் கோபம் எப்படி வெளிப்படும் என்பதற்காகவே அவ்வாறு கூறினேன். கமல்ஹாசன் செய்த தவறை மறைப்பதற்காகவே என் மீது குறை கூறுகின்றனர். நான் பேசியதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்கப் போவதில்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சு..! பாஜக கொந்தளிப்பு...! தேர்தல் ஆணையத்திலும் புகார்

You'r reading என்னை பதவி விலகச் சொல்ல கமல் யார் ?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீராப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை