புதுச்சேரி: ராகுல் நிகழ்ச்சிக்கு தலைமைச் செயலாளர் தடை

by Balaji, Feb 16, 2021, 20:35 PM IST

புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்த உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அரசு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு நாளை (புதன்கிழமை) ராகுல்காந்தி வர இருக்கிறார். மூன்று நிகழ்ச்சிகள் அவர்களுக்கு வழியே திட்டமிட்ட நிகழ்ச்சியாக கல்லூரி மாணவிகளுடன் அவள் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று இதற்காக முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில், மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்காக மகளிர் கல்லூரி மைதானத்தில் மேடை மற்றும், பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அரசு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த திடீரென தலைமை செயலாளர் அஸ்வினி குமார் அனுமதி மறுத்து தடை விதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சியை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி புஸ்சி வீதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கம்பன் கலையரங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

You'r reading புதுச்சேரி: ராகுல் நிகழ்ச்சிக்கு தலைமைச் செயலாளர் தடை Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை