ரஜினிக்கு இறைவாக்கு வந்து இறங்கியதா? - பழ.கருப்பையா ஆக்ரோஷம்!

ரஜினியை விமர்சித்த பழ கருப்பையா

by Radha, Jun 1, 2018, 18:48 PM IST

‘மக்கள் தொடர்ந்து போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Rajni-PazhaKaruppaiah

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பழ.கருப்பையா, “தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்பது ரஜினிக்கு எப்படி தெரியும்?

அவருக்கு இறைவாக்கு வந்து இறங்கியதா என கேள்வி எழுப்பினார். எதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள் என்பதை ரஜினி சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள எல்லா ஆலைகளையும் எதிர்த்து மக்கள் போராடவில்லை, உடலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மட்டுமே மக்கள் போராடுகின்றனர்.

போயஸ்தோட்டத்திற்கோ, கோட்டைக்கோ இந்த நோய் வராது. வாழ்வுரிமைக்காக போராடும் மக்களை காப்பாற்றாமல் ஆலையைப் பாதுகாக்கவே அரசு செயல்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டது உலகம் அறிந்த விஷயம்; ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக நிலைப்பாடு மிகச் சரியானது” என்று பழ.கருப்பையா கூறியுள்ளார்.

You'r reading ரஜினிக்கு இறைவாக்கு வந்து இறங்கியதா? - பழ.கருப்பையா ஆக்ரோஷம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை