தமிழகத்தில் பரவலாக கனமழை...

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.

Rain

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய மழை காலை வரை நீடித்தது.

சென்னை மாநகர பகுதியான நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், தியாகராயநகர், போரூர், கிண்டி, வேளச்சேரி மற்றும் மாநகரின் பல இடங்களில் மழையின் தாக்கம் இருந்தது.

அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழையின் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையோர பள்ளங்களில் தேங்கி கிடப்பதால் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலையோரங்களில் குளம் போல் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds

READ MORE ABOUT :