நீதிபதியிடம் திணறிய தமிழக போலீஸ்.. சயன், மனோஜை சிறைக்கு அனுப்ப மறுப்பு!

தமிழக போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜை காவலில் வைக்க நீதிபதி மறுத்து விடுதலை செய்தார்.

போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க போலீசார் திணறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொள்ளை மற்றும் தொடர் கொலை சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக டெல்லியில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தனர். இதனால் அதிமுக தொழில் நுட்ப பிரிவு சார்பில் முதல்வர் எடப்பாடி மீது அவதூறு பரப்புவதாக 3 பேர் மீதும் புகார் தரப்பட்டது.

சென்னை குற்றப்பிரிவு போலீசார் எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் டெல்லி விரைந்து மனோஜ், சயன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மாத்யூ சாமுவேல் போலீசில் சிக்கவில்லை. கைதான சயன், மனோஜ் இருவரையும் விமானத்தில் சென்னை அழைத்து வந்த போலீசார், நேற்று பகல் முழுவதும் விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். இருவரையும் கைது செய்ததற்கான போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிபதி சரிதா உத்தரவிட, போலீசார் அவகாசம் கேட்டனர்.

பின்னர் 5 மணி நேரம் கழித்து நீதிபதியின் வீட்டிற்கு சென்று ஆஜர் படுத்தினர். அப்போதும் போலீசார் சமர்ப்பித்த ஆதாரங்களில் திருப்திப்படாத நீதிபதி சரிதா இருவரையும் போலீஸ் காவலில் அனுப்பவோ, சிறையில் அடைக்கவோ மறுத்து விட்டார். சயன், மனோஜ் இருவரையும் விடுதலை செய்த நீதிபதி, வரும் 18-ந் தேதி தங்கள் தரப்பு வழக்கறிஞர்கர்ளுடன் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியதாக அவசர, அவசரமாக வழக்குப் போட்டு கைது செய்த போலீசார் போதிய ஆதாரங்கள் இன்றி நீதிபதி முன் தவித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :