துரோகம் செய்த மோடி தமிழகத்துக்குள் வராதீர்- மதுரையில் கறுப்புக் கொடி போராட்டம்: வைகோ

Black flag demonstration against Narendra Modi: Vaiko

by Mathivanan, Jan 26, 2019, 22:54 PM IST

தமிழக நலன்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகைக்கு எதிராக நாளை கறுப்புக் கொடி அறப்போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசாரத்துக்காக மோடி வருகை தருகிறார். மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக பல அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதையடுத்து மதுரை பகுதியில் முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக நலன்களுக்கு எதிராக தொடர்ந்து மோடி செயல்பட்டு வருகிறார்.

ஆகையால் அவரது மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இப்போராட்டத்துக்கு வைகோ தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

You'r reading துரோகம் செய்த மோடி தமிழகத்துக்குள் வராதீர்- மதுரையில் கறுப்புக் கொடி போராட்டம்: வைகோ Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை