கூட்டணி தொகுதி உடன்பாட்டை நாளைக்குள் முடிக்கிறது திமுக- மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுக்கு அழைப்பு!
Loksabha election, Dmk calls alliance parties for talks
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை நாளைக்குள் முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. மதிமுக, விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறப் போகிறது என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அதிமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்து விட்டதால் தற்போதுள்ள கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்ய திமுக முடிவெடுத்துள்ளது.
காங்கிரசுக்கு 10 தொகுதிகள், முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சிகளுக்கு ஒரு தொகுதி என ஒதுக்கீடு முடிந்து விட்டது.இந்திய ஜனநாயக கட்சியும் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
இந்நிலையில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை நாளை பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாளை திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
You'r reading கூட்டணி தொகுதி உடன்பாட்டை நாளைக்குள் முடிக்கிறது திமுக- மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுக்கு அழைப்பு! Originally posted on The Subeditor Tamil
More Politics News