விஜயகாந்துடன் அரசியல் பேசினேன் முடிவெடுப்பது அவரது கையில் தான் உள்ளது - நடிகர் சரத்குமார்!

actor Sharath Kumar meets dmdk Vijayakanth

Mar 3, 2019, 13:12 PM IST

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துப் பேசினார். விஜயகாந்துடன் அரசியல் பேசியதாகவும் கூட்டணி பற்றிய முடிவெடுப்பது அவருடைய கையில் தான் உள்ளது என்றும் சரத்குமார் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணையும் முடிவுக்கு தேமுதிக வந்து விட்டாலும் இன்னும் பேரம் முடியாமல் இழுபறியாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எந்தக் கூட்டணியிலும் இடம் கிடைக்காமல் தனித்து விடப்பட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று காலை விஜயகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், கல்ல உடல் நலத்துடன் விஜயகாந்த் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இருவரும் அரசியல் பற்றியும் பேசினோம். யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுப்பது விஜயகாந்தின் கையில்தான் உள்ளது என்றார் சரத்குமார்.

You'r reading விஜயகாந்துடன் அரசியல் பேசினேன் முடிவெடுப்பது அவரது கையில் தான் உள்ளது - நடிகர் சரத்குமார்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை