டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது தமிழகத்தை அவமதிப்பது- ராகுல் சுளீர்

டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது என்பது தமிழகத்தை அவமதிப்பதாகும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

தமிழகம் வருகை தந்த ராகுல் காந்தி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ரபேல் விவகாரத்தில் விதிமுறைகளை மீறி பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். நாக்பூரில் இருந்து இந்திய ஆட்சியை நடத்தக் கூடாது.

டெல்லியில் இருந்து தமிழகத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கவும் கூடாது. டெல்லியில் இருந்து தமிழக ஆட்சியை இயக்குவது தமிழகத்தை அவமதிப்பதாகும்.

சிறு, குறுந்தொழில்கள் வளர்ந்தால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும், உற்பத்தித்துறையில் சீனாவுடன் போட்டியிட முடியும் என்பதை தமிழகம் நிரூபித்துள்ளது.

ஆனால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள்தான் மத்திய அரசின் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. நான் இப்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளேன்.

இதேபோல் பிரதமர் மோடி இதுவரை எத்தனை முறை செய்தியாளர்களை சந்தித்த்ருக்கிறார்? வேலை இல்லாத திண்ட்டாட்டம்தான் முக்கிய பிரச்சனை. அதேபோல் விவசாயிகளின் பிரச்சனை.

காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். புல்வாமாவில் 45 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான மசூத் அசாரை விடுதலை செய்தது பாஜக அரசுதான். தமிழ் கலாசாரம் உட்பட மாநிலங்களின் கலாசாரங்கள் தாக்குதலுக்குள்ளகி உள்ளன

தற்போது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே ஓரணியில் ஒன்று திரண்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கான சட்டப்படியான நடவடிக்கையை ஆதரிக்கிறோம்.

எங்களுக்கு யார் மீதும் விரோதமோ, குரோதமோ இல்லை. அவற்றை எல்லாம் நாங்கள் தீர்த்துவிட்டோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds