ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்.... தனி அறையில் விசாரணை... - திருநாவுக்கரசிடம் கெடுபிடி காட்டும் சிபிசிஐடி

பொள்ளாச்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை குறிவைத்து பாலியல் கொடூரம் செய்த ஒரு கும்பல் குறித்த செய்திகளால் பதறிப் போயுள்ளது தமிழகம். இதன் பின்னணியில் ஆளும் கட்சி முக்கியப் புள்ளிகள், வாரிசுகள் என பலரது பெயரும் உள்ள தகவலால் 4 நாட்களாக கல்லூரி மாணவர்களும் கொந்தளித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த வழக்கை புதன்கிழமை முதல் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நாகரஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருநாவுக்கரசு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று, திருநாவுக்கரசை நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரை விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றனர். தற்போது அவர் எங்கு வைத்து விசாரணை செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக - கேரள எல்லையில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தனியாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு ஆரம்பித்த போது திருநாவுக்கரசு திருப்பதியில் பதுங்கியிருந்தது வீடியோ வெளியிட்டார். அங்கு அவர் ஆதாரங்களை ஒழித்து வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை திருப்பதி அழைத்துச் சென்று விசாரணை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்களை அழிக்க கோரி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds