சோடா பாட்டில் யார் வீசுவார்கள் என்று வீசினால் தெரியும் - சீமான் அதிரடி

ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் என கூறி உள்ளார். எல்லாரும் வீசுவார்கள், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Jan 29, 2018, 08:40 AM IST

ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் என கூறி உள்ளார். எல்லாரும் வீசுவார்கள், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடத்தில் பேசிய சீமான், “தமிழகத்தில் பஸ் கட்டணம் சுமார் 100 விழுக்காடு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2 காசு, 5 காசு என குறைத்து இருப்பது, பொதுமக்களை கேவலப்படுத்துவது போல உள்ளது. இதை கட்டண குறைப்பு என்று சொல்வதே கேவலம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் என கூறி உள்ளார். எல்லாரும் வீசுவார்கள், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால்தான் தெரியும். அதற்காக ஜீயர் மன்னிப்பு கேட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதை நான் வரவேற்கிறேன். உளமார வருத்தம் தெரிவித்து விட்டால் அதை ஏற்க வேண்டும்.

அரசியல் மாற்றம், அமைப்பு மாற்றம் ஏற்படுத்துவோம் என கூறி 7 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அதை சொல்கிறார் என்றால் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என பேசியபோது இனவெறி என்றனர். தற்போது அதைத்தான் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார்” என்று கூறியுள்ளார்.

You'r reading சோடா பாட்டில் யார் வீசுவார்கள் என்று வீசினால் தெரியும் - சீமான் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை