சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை - உறுதியாக கூறிய ஜெயக்குமார்

சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Feb 2, 2018, 22:56 PM IST

சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை தவிர்த்துவிட்டு, சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வதை வலியுறுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை" என்று தெரிவித்தார்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை இந்தி, ஆங்கிலம் என மாற்றிமாற்றி வாசித்தது குறித்த கேள்விக்கு, "அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத் தான் நாம் கடைப்பிடிக்கிறோம்" எனக் கூறிச் சென்றார்.

 

You'r reading சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை - உறுதியாக கூறிய ஜெயக்குமார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை