நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருகிறது –சீமான் தொடர்பான ஆடியோ வைரல் ஹிட்
Seeman audio release social media goes viral
சமூக ஊடகங்களில் தற்போதைய ஹாட் டாப்பிக் சீமான் தொடர்பாக வெளியாகியுள்ள அந்த ஆடியோதான்.
ஆடியோ சர்ச்சையில் சீமான் சிக்குவது இது முதல்முறையல்ல. அண்மையில், தனது கட்சி தொண்டர் ஒருவரிடம் சீமான் ஆவேசமாக பேசும் ஆடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் வியப்படையச் செய்ததோடு, பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதேபோல், தற்போது ஒரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. ஆனால், இம்முறை சீமான் பேசவில்லை. அவரின், உதவியாளர் புகழேந்தியும், அதே கட்சியை சேர்ந்த தனசேரன் என்பவரும் போனில் பேசும் அந்த ஆடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில், சீமான் பேசவில்லை என்றாலும், சீமானை தழுவியே அந்த உரையாடல் உள்ளது.
அந்த ஆடியோவில், புகழேந்தி- தனசேரன் இருவரும் தொடக்கத்தில் கட்சி தொடர்பான பிரச்னைகளைப் பேசுகின்றனர். அதன் பிறகு, ஒருவர் மாற்றி ஒருவர் தகாத வார்த்தைகளைப் பேசி வசைபாடியது மட்டுமல்லாமல் இடையில், சீமானின் அரசியல் தந்திரங்கள், அதில் அவர் அடைந்த தோல்விகள் குறித்து பேசி, அவரை திட்டித்தீர்த்து விட்டனர். இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியானதுடன் இணையதள வாசிகளுக்குத் தீனி போட்டதுபோல் பேசும் பொருளாகிவிட்டது. #SeemanAudio என்ற ஹேஷ்டேக்கில் பல மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கின்றன.
அதோடு, ‘’சீமானின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க அவரால் சீரழிக்கப்பட்ட தம்பிகளே தயாராகிவிட்டார்கள்..!, நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்....! அட்ரஸ் குடுத்த, நீ செத்த’’ போன்ற பதிவுகள் ட்விட்டரை ஆக்கிரமித்துள்ளன.
இந்நிலையில், இந்த அடியோ தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், ‘நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி செல்வாக்கு பெற்று வருகிறது. அந்த செல்வாக்கைக் குறைக்கவே இப்படியான தகவல்கள் பரப்பப்படுகிறது’ என்றார் ஆதங்கத்துடன்.
You'r reading நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருகிறது –சீமான் தொடர்பான ஆடியோ வைரல் ஹிட் Originally posted on The Subeditor Tamil
More Politics News