நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற தாயை எரித்து கொன்ற மகன்

son murder his mother for suspicion in behavior

by Subramanian, Apr 26, 2019, 10:00 AM IST

பெற்ற தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பெட்ரோல் எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகரை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி சாந்தி (46). இவர்களது மகன் ஆனந்தராஜ் (26). வைரமணி இறந்து விட்டார். எனவே சாந்தி மகன் ஆனந்தராஜுடன் வசித்து வந்தார்.

ஆனந்தராஜூக்கு தனது தாயின் நடத்தையில் நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது. வேறு ஆண்களுடன் தனது தாய்க்கு தொடர்பு இருப்பதாக அவருக்கு சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆனந்த ராஜின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

எனவே ஆத்திரம் அடைந்த அவர் தன் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சாந்தி சுருண்டு விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி ஆனந்தராஜ் தாயை அருகில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது அங்கு வந்த சாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதை பார்த்து விட்டார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்த ஆனந்தராஜ் தனது தாய்மாமா மணிகண்டன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

தீக்காயம் அடைந்த மணிகண்டன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி நேற்று ஆனந்தராஜை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெற்ற தாயை மகன் எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது

தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்'..! –இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

You'r reading நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற தாயை எரித்து கொன்ற மகன் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை