மேட்ரிமோனியல் நிறுவனங்களை கண்காணிக்க வழிகாட்டுதல் அமைக்கக்கோரிய மனு மீது ஜூலை 9-ல் விசாரணை

திருச்சி பெற்றோர் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயந்திராணி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் மணமகன், மணமகள் தேடலுக்கான தனியார் திருமண தகவல் மையங்கள், (மேட்ரிமோனியல்) அதன் இணையதளங்களில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த இணையதளத்தில் கணவரை இழந்த நிலையில், பெண் குழந்தையுடன் வாழும் பெண் மருத்துவர் ஒருவர், மறுமணம் செய்ய முடிவு செய்து தனது விபரங்களை மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

இவரது விபரங்களை தெரிந்த அஜய் என்பவர், தான் அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அறிமுகமாகியுள்ளா். பின்னர் அப்பெண்ணுடன் பாலியல் ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ளார். அவசர தேவை என்றும், ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுவதாகவும் 2 தவணைகளில் 18 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் அப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது தொடர்பான விசாரணையில் அஜய் பல்வேறு பெயர்களில் மேட்ரிமோனியல் இணையதளங்களில் போலியான தகவல்களை பதிவு செய்து பல பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகளை பறித்து ஏமாற்றியது தெரியவந்தது.

File

இதனால் இது போன்ற மோசடிகளைத் தவிர்க்கும் வகையில், தனியார் திருமண தகவல் மைய ( மேட்ரிமோனியல்) இணைய தளங்களில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தவும், மேட்ரிமோனியல் இணையதளங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில்," திருமண மோசடி தொடர்பாக அஜய் மற்றும் அவரது ஓட்டுனர் முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு,

' தனியார் திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 9ஆம் தேதி ஒத்திவைத்தனர். 

- தமிழ் 

ஒரே வீட்டில் இரு அந்நியர்: மன விலக்கத்தில் தம்பதியர்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds