சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்..

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவி வகித்து வந்தார். அவரை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம்(மூத்த நீதிபதிகள் குழு), மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து விட்டு, அங்கு தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றியது.

ஐகோர்ட் தலைமை நீதிபதிகளில் மூத்த நீதிபதி தஹில்ரமானி. 70க்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இவரை நான்கைந்து நீதிபதிகளை கொண்ட சிறிய மேகாலயா மாநில ஐகோர்ட்டுக்கு இடம் மாற்றம் செய்தது இவருக்கு அதிருப்தியை கொடுத்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 6ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டல் மாற்றத்தையும் கொலிஜியம் ரத்து செய்தது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தற்போது பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள அமரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலிஜியத்தின் பரிந்துரைப்படி இவரை நியமித்துள்ளார். மேலும், ஏ.பி.சாஹி நவம்பர் 13ம் தேதிக்குள் பொறுப்பேற்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds