போலீஸ் தடையை மீறி திமுக கூட்டணி பேரணி.. வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் இன்று(டிச.23) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக ராஜரத்னம் ஸ்டேடியம் வரை கண்டனப் பேரணி நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், திமுக பேரணிக்கு போலீசார் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, இந்தியன் ரிப்போர்ட்டர் என்ற இதழின் ஆசிரியர் வாராகி, சென்னை ஆவடியைச் சேர்ந்த எழிலரசு ஆகியோர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக எடுத்து நேற்றிரவு 9 மணியளவில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பிலும், அரசுதரப்பிலும் வாதிடப்பட்டது. திமுகவுக்கு நோட்டீஸ் அளிக்கப்படாததால் அவர்கள் ஆஜராகவில்லை.
அரசு தரப்பில் பிளீடர் ஆஜராகி, பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை. திமுக தரப்பில் அனுமதி கேட்ட போது 18 கேள்விகளை எழுப்பி கடிதம் அளித்தோம். அதற்கு மழுப்பலாக பதிலளித்திருந்தனர். அதானல், அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று தெரிவித்தார்.
நீண்ட வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஜனநாயக போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. போலீசாரின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளிப்பது ஆச்சரியமளிக்கிறது. எனினும், போலீசாரின் தடையை எதிர்த்து திமுக வழக்கு தொடுக்கவில்லை. எனவே, தடையை மீறி பேரணி நடந்தால், அதை காவல் துறையினர் முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும். வன்முறை நடந்தால் அதற்கு அந்த கட்சி தலைவர்கள் பொறுப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டனர்.
இதைத் தொடர்ந்து பேரணி கண்டிப்பாக நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன்படி, பேரணி இன்று(டிச.23) காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், பேரணி முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுளளனர். போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :