செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் திடீர் ரெய்டு.. எடப்பாடி அரசு மீது பாய்ச்சல்..

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கு அவர், எடப்பாடி அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது, செந்தில்பாலாஜி, அதிமுகவை விட்டு பிரிந்து அ.ம.மு.க.வில் இருந்த போது அவர் மீது அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். அப்போதே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அவர் ஜாமீனில் விடப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அதே வழக்கு குறித்து ஆவணங்களை தேடுவதற்காக சென்னையில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, கரூரில் உள்ள அவரது தம்பி வீடு, அலுவலகம், ராமேஸ்வரப்பட்டி கிராமத்தில் உள்ள் அவரது பெற்றோர் வீடு ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று காலையில் திடீர் சோதனை நடத்தினர்.

இது குறித்து, செந்தில்பாலாஜி கூறியதாவது:
நான் அ.ம.மு.க.வில் இருக்கும் போதே என் மீது இதே புகார் ெகாடுக்கப்பட்டது. ஆனால், எப்.ஐ.ஆரில் என் பெயர் கிடையாது. அதன்பிறகு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையிலும் எனக்கும், அந்த குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது எடப்பாடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதே வழக்கில் காவல்துறையினரை அனுப்பி சோதனை நடத்துகிறார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் என்னை போட்டியிடாமல் செய்ய வேண்டுமென்பதற்காக இப்படி காவல்துறையினர் மூலமாக அழுத்தம் கொடுக்கிறார்கள். நான் இல்லாத போது என் வீட்டிற்கு சென்று, வேலை ஆட்களை வைத்து சோதனையிடுகிறார்கள்.
நான் இந்த வழக்கை நேரிடையாக சந்திக்கத் தயார். நான் இருக்கும் போது வீட்டுக்கு வந்து விசாரிக்கட்டும். நான் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரத் தயார். அதிமுகவில் நான் இருக்கும் போது எந்த வழக்கும் தொடரப்படவில்லை. நான் வெளியேறியதும் இப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எடப்பாடி அரசு செயல்படுகிறது
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds