தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்வு.. சென்னையில் 156 பேருக்குப் பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் நேற்று வரை 5,734 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோயால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்திருக்கிறது.


மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1135 பேருக்குப் பாதித்துள்ளது. 2வதாக, தமிழகத்தில் நேற்று வரை 738 பேருக்குப் பாதித்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:இன்று(ஏப்.8)ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 42 பேருக்கு ஒரே தொற்று மூலம் பரவியிருக்கிறது. டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 553 பேருக்கும், அவர்கள் மூலமாக 150 பேருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.
சென்னையில் 156 பேர், கோவை 60, திண்டுக்கல் 46, நெல்லை 40, தேனி 39, திருச்சி 36, நாமக்கல் 33, தேனி 39, திருச்சி 36, நாமக்கல் 33, ஈரோடு 32, ராணிப்பேட்டை 29, செங்கல்பட்டு 24, மதுரை 24, கரூர் 23, திருப்பூர் 22, விழுப்புரம் 20 மற்றும் இதர மாவட்டங்களில் அதற்குக் குறைவானவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது.

விமான நிலையங்களில் இது வரை 2 லட்சத்து 10,530 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 60,739 பேர், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1953 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.தமிழகத்தில் தற்போது 22,049 படுக்கைகள் தயாராக உள்ளன. 3,371 வென்டிலேட்டர்கள் இருப்பு உள்ளது. இது வரை 6095 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 4,893 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 21 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds