தமிழகத்தில் ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா.. பலி 349 ஆக உயர்வு..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 37,716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.உலக நாடுகளில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் போது, கொரோனா பரவலும் குறைந்திருந்தது. ஆனால், இந்தியாவில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்புதான் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதற்கு லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்த சோதனையும் செய்யாமல் சொந்த மாநிலங்களுக்குச் சென்றதுதான் முக்கியக் காரணம். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதிகளை அரசுகள் முறையாகச் செய்து தராததன் விளைவுதான் அவர்கள் அப்படிச் சென்றார்கள்.


தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் அடக்கம். குவைத் 5, சவுதி 2, ஐக்கிய அரபு அமீரகம் 3, மாலத்தீவு 2, மற்றும் டெல்லி 1, மகாராஷ்டிரா 6, கேரளா 2, கர்நாடகா 1, ஆந்திரா 1, அந்தமான் 2, மேற்குவங்கம் 12 என்று வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது 38,716 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 23 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 349 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று 15,456 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 6 லட்சத்து 25,312 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று 1390 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் நேற்று 1406 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 27,398 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் 1656 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 623 பேருக்கும், கடலூரில் 517 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds