Advertisement

சென்னையில் ஒரே நாளில் 9371 கொரோனா பரிசோதனை.. 1654 பேருக்கு தொற்று உறுதி..

சென்னையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 9371 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில், 1654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகத் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. அதில், சென்னையில் மட்டுமே 1300க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதே போல், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது. இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது.


தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்24) ஒரே நாளில் 2865 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 91 பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2424 பேரையும் சேர்த்து 37,763 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர்களில் கடந்த 19ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்றுதான் மிக அதிகபட்சமாக 9371 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில், 1654 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 4202 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 87 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2907 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 66 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1375 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் 97 பேர், தேனி 81, திருவண்ணாமலை 52, தூத்துக்குடி 49, திருநெல்வேலி 25, திருச்சி 75, வேலூர் 59, விழுப்புரம் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் நேற்று ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியிருக்கிறது.ஏற்கனவே சென்னையில் கொரோனா பாதித்தவர்களும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்குச் சென்றதில் கொரோனா அந்த மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 33 பேர் பலியாயினர். இதையும் சேர்த்தால், சாவு எண்ணிக்கை 866 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்