சாத்தான்குளம் சம்பவம்.. சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது..

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணம் என்று குறிப்பிட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்துப் பேசவே, போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்து ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் அங்கு ஓடி வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்பு, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை, இந்த மரணங்கள் குறித்து தாமாக வழக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, தமிழக அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையில் தாமதம் ஏற்படக் கூடாது என்று தெரிவித்தனர். அதனால், சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கை ஏற்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி. அனில்குமாரிடம், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு ஒப்படைத்தார்.இதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணங்களை மர்ம மரணம் என்று குறிப்பிட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds