தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6 ஆயிரம் தாண்டியது..

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இவர்களில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 5850 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 89,787 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 121 பேரையும் சேர்த்தால் 6007 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 53,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது வரை தமிழகத்தில் 37 லட்சத்து 12,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 65,075 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 1182 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 19,059 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 344 பேருக்கும், திருவள்ளூர் 489, காஞ்சிபுரம் 249 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 21,499 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 20,618 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,296 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று அங்கு 77 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. அந்த மாவட்டத்தில் இது வரை 12,955 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், சென்னையில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இது வரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இது வரை கட்டுப்படவில்லை. மேலும், கொரோனா நோயாளிகள் இறப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநிலம் முழுவதும் இறப்பு 6 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதில் சென்னையில் மட்டுமே 2501 பேர் பலியாகியுள்ளனர். அடுத்ததாக, செங்கல்பட்டு 356, கோவை201, திருவள்ளூர் 346, திருவண்ணாமலை 127, நெல்லை 130, தூத்துக்குடி 90, வேலூர் 129, விருதுநகர் 159 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds

READ MORE ABOUT :