கனமழை எதிரொலியால் நெல்லை, தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Mar 14, 2018, 09:16 AM IST

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அதற்கான பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் இது பொருந்தாது என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத் தீவு நோக்கி நகர்வதால் நாளை (வியாழன்) வரை லட்சத் தீவிற்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கனமழை எதிரொலியால் நெல்லை, தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை