தூத்துக்குடி அருகே கடற்கரையில் சிலிண்டர் வெடித்தது விசைப்பலகை மற்றும் கன்டெய்னர் லாரி எரிந்து சாம்பல்.. ரூ.1.5 கோடி சேதம்..

தூத்துக்குடி தருவை குளம் 60 வீடு காலணியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் வயது 50. இவர் தனக்குச் சொந்தமான விசைப்பலகை தருவை குளம் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தார் அந்தப் படையில் சில மீனவர்கள் காஸ் சிலிண்டரை வைத்துச் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டருடன் உள்ள டியூப்பில் ஓட்டை விழுந்ததில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இதில் விசைப்படகு முழுவதும் தீ பிடித்து எரிந்து சாம்பலானது. சம்பவம் நடக்கும்போது அந்த இடத்தின் அருகில் ஒரு கன்டெய்னர் லாரியிலிருந்து ஐஸ் கட்டிகளைச் சிலர் இறக்கிக் கொண்டு இருந்தனர். சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஒரு பாகம் கன்டெய்னர் லாரியில் உள்ள டீசல் டேங்கின் மீது விழுந்தது. இதில் டீசல் டேங்க் வெடித்ததால் லாரியும் தீப்பிடித்து எரிந்தது.

அருகில் இருந்தவர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த, தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.அதேசமயம் எரிந்து கொண்டிருந்த விசைப்படகின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் சில விசைப்படகுகளை மீனவர்கள் சிலர் உடனடியாக அப்புறப்படுத்தி கடலுக்குள் கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் விசைப்படகிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான வலைகளும், ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் ஐஸ் கட்டிகளை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரியும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.இந்த விபத்து குறித்து தருவை குளம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
5-killed-in-auto-accident-near-thoothukudi
தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
thoothukudi-road-blockades-in-several-places-demanding-drainage-of-stagnant-rain-water
தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்
thoothukudi-rape-case
மாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்தது போக்ஸோ சட்டம்.. நியாயம் கேட்டு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
release-of-examination-schedule-for-10th-and-12th-class-within-10-days-minister-announced
இன்னும் 10 நாளில் 10, 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு: செங்கோட்டையன் தகவல்
vandu-murugan-style-challenge-dmk-personal-vehicles-damage
வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம்
supreme-court-refused-reopening-of-sterlite-copper-plant-at-thoothukudi
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..
mysterious-ship-caught-near-thoothukudi-100-kg-of-heroin-seized
தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்
the-court-ordered-the-placement-of-boards-on-archeological-sites-in-public-places
மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு
10-crore-worth-of-red-wood-confiscated-in-thoothukudi
தூத்துக்குடியில் ரூ 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
kandasashti-festival-started-this-morning-at-the-thiruchendur-subramania-swamy-temple
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
Tag Clouds