போலி பத்திரங்கள் மூலம் அரசு நிலம் விற்பனை: பத்திரப்பதிவு துறை ஊழியர் ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திர பதிவு துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் சங்கரன்கோவில் பிரதான சாலை அருகே காவல்துறைக்குச் சொந்தமான 2.1 ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண் 635-2ல் உள்ள இந்த நிலம் புறம்போக்கு நிலமாக இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலக உத்தரவின்படி காவல்துறைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் காவலர் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் அறிவிப்பு விளம்பரமும் வைக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் எதுவும் கட்டாமல் இந்த நிலம் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. காவல்துறை வைத்த அறிவிப்பு விளம்பரத்தையும் மர்ம நபர்கள் அப்புறப்படுத்திவிட்டனர். இப்பகுதியில், ஒரு சென்ட் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் முதல் 30 லட்சம் வரை உள்ளது.

இந்நிலையில், சிலர் இந்த நிலத்துக்கான போலியான பொது அதிகார ஆவணம் தயார் செய்து போலி பத்திரம் பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து, சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் பாலு அளித்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களான ராஜேந்திரன், மனோகரன் உட்பட 13 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 465, 467,468, 471, 420 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பத்திரபதிவு அலுவலக ஊழியர்கள் த லைமறைவாகி முன் ஜாமீன் பெற்றனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் என்பவரை சுரண்டை போலீசார் கைது செய்தனர். இவர் தற்போது தென்காசி அருகே உள்ள இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிது வருகின்றார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள காவல்துறைக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில் எட்டு மா தங்களுக்கு பிறகு பத்திரபதிவு துறை ஊழியர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :