எங்கும் இருந்த ரத்தக் கறைகள்... சாத்தான்குளம் போலீஸின் மிருகத்தனத்தை சொல்லும் குற்றப்பத்திரிக்கை!

சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இவர்கள் இருவரையும் காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அப்போதே கொலையின் கொடூரங்கள் குறித்துப் பேசப்பட்டன. இதனால் சிறையில் அடைத்த சிலமணி நேரங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்நிலையில்தான், இவர்கள் இருவரும் அனுபவித்த சித்திரவதையை வெளிக்கொணரும்விதமாக புதிய காட்சிகள் வெளியாகியன. அந்த வீடியோயில் தந்தை, மகன் இருவரது பின்புறமும் கொடூரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பென்னிக்ஸின் பின்புறத்தின் தோல் உரிக்கப்பட்டுள்ளது பார்ப்பவர்களை அச்சத்தில் உறையவைக்கிறது.

இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் உள்ள தகவல்கள் சில இப்போது வெளியாகியுள்ளன. ``தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் பொய் குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து இருவர் மீதும் சாத்தான்குளம் போலீஸார் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலால் இருவரின் உடலிலும் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. கூடவே, அதிகமான ரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் சிந்திய ரத்தங்களை அவர்களையே துடைக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர் போலீஸார். இதற்கு சான்றாக, காவல்நிலைய கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தங்கள் படிந்துள்ளது. இந்த ரத்தக் கறைகள் இறந்துபோன தந்தை, மகன் டிஎன்ஏ உடன் பொருந்தியுள்ளது மத்திய தடயவியல் துறையின் பரிசோதனையில் (CFSl) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே ரத்த மாதிரி ஜெயராஜ் மனைவி செல்வராணி DNA உடனும் பொருந்துகிறது. ரத்தக் கறைகளை சேகரிக்கும் முன்பாகவே, தடயங்களை காவல்துறையினர் அழிக்க முயன்றுள்ளனர்.

காவல் அதிகாரிகள் மட்டுமல்ல, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா தந்தை, மகனை பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டு இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டு, சிறைக்கு அடைக்க இவர்கள் தகுதியானவர் என தகுதி சான்றிதழ் கொடுத்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :