22ஆக உயர்ந்தது குரங்கணி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

Apr 3, 2018, 09:07 AM IST

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே, மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேரும் இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த துயர சம்பவத்தில், 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும், மருத்துவமனையில் 90 சதவீதம் காயங்களுடன் மற்றவர்களை அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், அடுத்தடுத்த நாட்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து சிகிச்சை பெற்ற பலரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப் பேட்டையை சேர்ந்த சிவசங்கரி என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் குரங்கணி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 22ஆக உயர்ந்தது குரங்கணி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை