தருமபுரி அருகே வீட்டில் பதுக்கி மது விற்பனை..அம்பலப்படுத்திய திமுக எம் பி
சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் செய்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் மது விற்பனையை திமுக எம் பி.. செந்தில்குமார் அம்பலப்படுத்தி உள்ளார்.தருமபுரி அருகே கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் தினமும் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து மது விற்பனையைத் தடை செய்யக்கோரி கிராம மக்கள் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி யான. டி என் வி . செந்தில்குமாரிடம் கிராம மக்கள் புகார் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து எம் பி செந்தில்குமார் கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று கிராம மக்கள் உதவியுடன் சட்ட.விரோத மது விற்பனையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.பாராளுமன்ற உறுப்பினரே களத்தில் இறங்கிவிட்டதை அறிந்த தொப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து நூறுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
You'r reading தருமபுரி அருகே வீட்டில் பதுக்கி மது விற்பனை..அம்பலப்படுத்திய திமுக எம் பி Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News