சென்னை, கோவையில் கொரோனா நீடிப்பு.. சிகிச்சையில் 9880 பேர்..

by எஸ். எம். கணபதி, Dec 17, 2020, 09:08 AM IST

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9880 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு புதிய நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.16) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1181 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 2342 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1240 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 80,531 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,931 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9880 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் நேற்று புதிதாக 344 பேருக்கும், கோவையில் 111 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேர், செங்கல்பட்டு 74 பேர், ஈரோடு மாவட்டத்தில் 53 பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி போன்ற பல மாவட்டங்களில் ஓரிருவருக்குத்தான் தொற்று பாதித்துள்ளது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 48 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் நேற்று 72 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading சென்னை, கோவையில் கொரோனா நீடிப்பு.. சிகிச்சையில் 9880 பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை