போதும்ம்ம்ம்ம்பா! என்னப்பா, இப்படி பன்றீங்களேப்பா? - நடிகர் விவேக்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளதை விமர்சித்து நடிகர் விவேக் நாங்கள் கேட்பது நீரப்பா!.. நீங்கள் தருவதோ சூரப்பா என கவிதை வடிவில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

Apr 7, 2018, 23:29 PM IST

அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளதை விமர்சித்து நடிகர் விவேக் நாங்கள் கேட்பது நீரப்பா!.. நீங்கள் தருவதோ சூரப்பா என கவிதை வடிவில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை புதிய துணை வேந்தராக நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் பல்வேறு கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக பலர் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழக மக்களும், விவசாயிகளும் போராடி வருகின்ற நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிடுப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘‘நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா” என்று கவிதை நடையில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading போதும்ம்ம்ம்ம்பா! என்னப்பா, இப்படி பன்றீங்களேப்பா? - நடிகர் விவேக் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை