முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது.. எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கிய பழனிசாமி..

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேலம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுகவின் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(டிச.19) சனிக்கிழமை காலையில் பெரிய சோர்கையில் உள்ள சென்றாயர் பெருமாள் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார். அவருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

அங்கு சாமி தரிசனத்தை முடித்த பின்பு, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து அவர் எடப்பாடியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல்வரை வரவேற்க நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் தாம்பூலத் தட்டில் பூக்களுடன் காத்திருந்தனர். முதல் நாளிலேயே பல லட்சம் ரூபாய் செலவிட்டு, முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி தொடருமா என்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், பல்வேறு தடைகளைத் தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோட்டு வருகிறது. மின்சார உற்பத்தி, நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

புயல், கொரோனா தொற்று போன்ற பேரிடர்களை அரசு வெற்றிகரமாகக் கையாண்டு வந்துள்ளது. நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டுக் கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை இந்த எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பதாகும்.நான் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவன் என்பதால் தான், அந்த மாணவர்களின் நிலையை உணர்ந்து மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நீடிக்குமா என்று பேசினார்கள். எனக்கு முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது. இவ்வாறு எடப்பாடி பேசினார்.

முதல்வர் பேசும் போது, எடப்பாடியில் இது வரை திமுக வென்றதில்லை என்று குறிப்பிட்டார். ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :