இனி ஆதார் கட்டாயம், அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 2020 ல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2021 ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தோட்டக்கலை துறை, விவசாய துறை, பொறியியல் துறை, கட்டுமான துறை, தொல்லியல் துறை, மீன்வள துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, கூட்டுறவு துறை, புள்ளியியல் துறை, புவியியல் துறை, சட்டத்துறை, நகர்புற மேம்பாட்டு துறை, குடிமையியல் துறை (Gr II) , தொழிற்சாலை மற்றும் வர்த்தக துறை, சிறைத்துறை, இந்து அறநிலையத்துறை, குடும்ப நல்வாழ்வு துறை, மருத்துவ துறை, நூலகத்துறை, சமூக பாதுகாப்பு துறை, காடு வளர்ப்பு துறை, சத்துணவு துறை, பள்ளிக்கல்வி துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை என கிட்டத்தட்ட 40 துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை இந்த ஆண்டு வெளியிட ஆயுத்தமாக உள்ளது. எனினும் இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தின் மூலமே தேர்வர்கள், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

அப்படி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், அவர்களுக்கென தனி கணக்கை தொடங்க வேண்டும். அதில் அவர்களின் விவரங்கள், கல்வி தகுதி போன்றவை உள்ளீடு செய்ய வேண்டும். இதில் தற்போது ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள், தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.tnpsc.gov.in/

https://tamil.thesubeditor.com/media/2020/12/51_PRESS-RELEASE.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :