புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.!

by Sasitharan, Jan 18, 2021, 20:48 PM IST

சென்னை: 30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறவைத்தால்தான் புதுச்சேரிக்கு வருவேன் இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கூறினார். திமுகவின் புதுச்சேரி மாநிலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், இன்று புதுச்சேரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜெகத்ரட்சகன், புதுச்சேரி சொர்க்கப்பூமியாக இருந்தது ஆனால் தற்போது நரகமாக மாறிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்றார். திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை