இயேசு அழைக்கிறார் என்ற ஜெப கூட்டத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பால் தினகரன். கோவையில் காருண்யா என்ற பெயரில் பல்கலைக்கழகத்தையும் இவர் நடத்தி வருகிறார். இவர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக இவருக்குச் சொந்தமான 48 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.நான்காவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. இதனிடையே ஒரு வாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறையினர் பால் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.நேற்று நடந்த சோதனையில் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் நேரில் ஆஜராக பால் தினகரனுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
Advertisement