பூட்டிய வீட்டை உடைத்து பேராசிரியை நிர்மலா தேவி கைது!

கல்லுரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து கைது செய்துள்ளனர்.

நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியர்! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இந்தக் கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாக தெரிகிறது. ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது.

நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும், நிர்மலா தேவியால் வலியுறுத்தப்பட்ட மாணவிகள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். தவிர, நிர்மலா தேவி மீது நடவடிக்கை கோரி மாதர் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி நிர்வாகம் மேற்படி பேராசிரியை நிர்மலா தேவியை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்தது.

இதன் அடுத்தகட்டமாக கல்லூரி நிர்வாகமும், மாதர் அமைப்பும் தனித்தனியாக நிர்மலா தேவி மீது போலீஸில் புகார் செய்தன. அவற்றின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியின் இல்லத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவியின் அருப்புக்கோட்டை இல்லத்தை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார். மேலும், வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பேராசியை நிர்மலாதேவி தவறான முடிவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் பூட்டை உடைத்து போலீசார், அவரை கைது செய்தனர்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds