சாகும் வரை உண்ணாவிரதம் சாகும் வரை சிறை - டிடிவி தினகரன் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகை செய்து அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தவும், சாகும் வரை சிறையில் இருக்கவும் உறுதியாக இருக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Apr 18, 2018, 10:28 AM IST

ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகை செய்து அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தவும், சாகும் வரை சிறையில் இருக்கவும் உறுதியாக இருக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த கடந்த 8 ம் தேதி நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் கோர்ட் மூலம் அனுமதி பெற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எடப்பாடி அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அடிமை அரசும், மத்திய அரசும் தமிழக மக்களை சோமாலியா நாடாக ஆக்க முயற்சி செய்து வருகிறது.

காவேரி உரிமையை மீட்டுத்தராமல் அடிமை அரசு செயல்படுகிறது. பிரதமர் வந்தார். ஆனால் அவர் எவ்வளவு கறுப்புக்கொடி, சிகப்பு கோடி, வெள்ளை கொடி காட்டினாலும் அவர் அதை கண்டு கொள்வது கிடையாது. மாநில அரசு கண் மூடி, வாய் பொத்தி சேவை செய்யும் இந்த அரசு தமிழகத்தை இந்திய வரை படத்தில் இருந்தே நீக்க முயற்சிக்கும் மோடி அரசிற்கு ஆதரவாக உள்ளது.

அம்மாவின் பெயர் கொண்ட இந்த இயக்கம் மக்களுக்காக ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகை செய்து அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தவும், சாகும் வரை சிறையில் இருக்கவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக இருக்கிறது. புதிய இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை கட்சி கூட்டத்தை விட மக்கள் தேவைக்காகவே ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

30 ஆண்டுகளாக இயக்கத்தை கட்டிக்காத்து அம்மா, 30 ஆண்டுகள் துணை நின்றது தியாகாதலவி சின்னம்மா, அதனால் தான் அம்மா பெயரில் கட்சி தொடக்கி உள்ளோம். இதற்கு போய் வழக்கு போட்டிருக்கிறார்கள். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்.

90 சதவீத தமிழக இளைஞர்கள் அமைச்சர்களை வாட்ஸ் ஆப்பில் கோமாளிகள் என்றே கூறி வருவதைத்தான் நான் பேசினேன். ஆனால் இளைஞர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்பதால் என் மீது வழக்கு போடுகிறார்கள். கோர்ட்க்குப் போய் என்ன வழக்குப் போட்டுள்ளனர் என்று பார்த்தல் இவர்களை கோமாளிகள் என்று சொன்னதற்கு போய் வழக்குப்போட்டு உள்ளனர். இவர்கள் கீழ்பாக்கத்திற்கு போக வேண்டியவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சாகும் வரை உண்ணாவிரதம் சாகும் வரை சிறை - டிடிவி தினகரன் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை