நிர்மலா தேவியுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த தாத்தா யார்? - வேல்முருகன்

நிர்மலா தேவி மாணவிகளுடனான வாட்ஸ்அப் உரையாடலில் தாத்தா போன்றவருடன் நான் நெருக்கமாக புகைப்படம் எடுத்த அந்த தாத்தா யார்? என்று தெளிவுப்படுத்த வேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடனான வாட்ஸ்அப் உரையாடலில் தாத்தா போன்றவருடன் நான் நெருக்கமாக புகைப்படம் எடுத்தேன் என்று கூறி இருக்கிறார். அந்த தாத்தா யார்? என்று தெளிவுப்படுத்த வேண்டும்

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தேகிக்ககூடியவரே தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக விசாரணை குழு அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்வாரிலால் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யார், யாருடன் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசியுள்ளனர் என்பதையும், நிர்மலா தேவி யாருடன் பேசியுள்ளார் என்பதையும் விசாரிக்க வேண்டும்.

பேராசிரியை நிர்மலா தேவியை இப்படி பேச நிர்ப்பந்தம் செய்தது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியில் வரும். எனவே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

கவர்னர் மாளிகையில் என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை. அது ஒரு மர்ம மாளிகை போன்று உள்ளது. பேராசிரியையின் பின்புலத்தில் யார் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இந்த பிரச்சனையில் சிக்கி சந்தேகத்திற்கு ஆளாகி உள்ள தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும். பிரதமரும், ஜனாதிபதியும் கலந்து பேசி தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds