செல்பி எடுக்க முயன்று குவத்தில் விழுந்த இளைஞர்!

சென்னை நேப்பியர் பாலம் அருகே செல்பி எடுக்க முயன்ற இளைஞர் குவத்தில் தவறி விழுந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்ஃபி, எந்த இடத்திலும் புகைப்பட மோகம். இளைஞ தலைமுறையினரிடம் இந்த செல்போன்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்பு, தூங்குவதற்கு முன், நடுரோடு, வண்டி ஓட்டும்போது என எங்கே பார்த்தாலும் செல்பிக்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் செல்பி மோகம் இளைஞர்களை பிடித்து ஆட்டுகிறது. . உலகளாவிய அளவில் கூகுள் நடத்திய ஆய்வு, செல்ஃபிக்களை மேம்படுத்த ஃபில்டர்களைப் பயன்படுத்துவது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பரவலாக உள்ளதாக தெரிவித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி மோகம் யாரையும் விடவில்லை.

ஆனால் இந்த செல்ஃபி மோகத்தால் பலரின் வாழ்க்கை பறிபோயுள்ளன என்பது தான் சோகமான உண்மை. அந்த வகையில் சென்னை நகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் நதியோரம் நின்று செல்பி எடுக்கமுயன்ற வாலிபர் கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். விழுந்த நபர் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பதும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணிப்புரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. இவர் செல்பி எடுக்க முயன்றபோது குவத்தில் தவறி விழுந்துள்ளார்.

அப்போது அருகிலிருந்தவர்கள் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிகேணி தீயணைப்பு துறையினரும், மீட்பு படையினரும் அவரை மீட்டு முதலுதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரை எச்சரித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds