ஒரு வாரத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு – 45 லட்சம் தமிழர்களின் கதி…

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,959 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பரவல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஜனவரி16ம்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதலில் முன்கள பணியாளர்களான சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், உள்ளாட்சித்துறையினருக்கும் மட்டும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 60 வயது மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்கள் என படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதியிலிருந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்த மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று கூறியது. இதனடிப்படையில் ஒன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அனுப்பியுள்ள 72 லட்சத்து 85ஆயிரம் தடுப்பூசிகளில் 60 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீணாகியுள்ள தடுப்பூசிகள் போக ஒரு வாரத்திற்கு தேவையான 6 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது. இதனால் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ள 45 லட்சம் பேருக்கு 2வது தடுப்பூசி போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள கூடுதலான தடுப்பூசிகள் வந்த பிறகு 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds